பிகேஎப்எஸ் வழக்கில் சான் கொங் சாய்-க்கு விடுதலை

pkfzமுன்னாள் போக்குவரத்து அமைச்சரும்  முன்னாள் மசீச தலைவருமான  சான்  கொங்  சோய்மீது  கிள்ளான்  துறைமுக  தீர்வையற்ற  மண்டல (பிகேஎப்எஸ்)  ஊழல்  வழக்கில்  மோசடி செய்ததாக   சுமத்தப்பட்டிருந்த மூன்று  குற்றச்சாட்டுகளை  அரசுத் தரப்பு  மீட்டுக்கொண்டதைத்  தொடர்ந்து  அவர்  விடுவிக்கப்பட்டார்.

இது அந்த  ஊழல்  வழக்குக்குக்  கிடைத்த  இரண்டாவது  அடியாகும். இதற்குமுன் முன்னாள்  மசீச  தலைவரும்  முன்னாள்  மசீச  தலைவருமான  லிங்  லியோங்  சிக்கும் அமைச்சரவையை  ஏமாற்றி  பில்லியன்  கணக்கில்  மோசடி  செய்தார்  என்று  குற்றம்   சாட்டப்பட்டுப்  பின்னர்  விடுவிக்கப்பட்டார்.