ராஜா பெட்ராமீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது

rajaலெப்டனெண்ட்- கர்னல்  அப்துல் அசீஸ்  பூயோங்கும் அவரின்  துணைவியார்  லெப்டனெண்ட்- கர்னல்  நோர்ஹயாதி ஹசனும் ரிம2 மில்லியன் கோரி வலைப்பதிவர்  ராஜா  பெட்ரா  கமருடின்மீது தொடுத்திருந்த  வழக்கைத்  திரும்பப்  பெற்றுக்கொண்டனர். 

வழக்கு  மீட்டுக்கொள்ளப்பட்டதை  ராஜா பெட்ராவின்  வழக்குரைஞர்  ஜே.சந்திராவும்  உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன  நிபந்தனைகளின்பேரில் அது திரும்பப் பெறப்பட்டது  என்பதை  அவர்  வெளியிடவில்லை.
அல்டான்துன்யா ஷாரிபு கொலையில்  அவர்களுக்குத்  தொடர்புண்டு  என்று ராஜா பெட்ரா  அவரது  வலைப்பதிவில்  கூறி  இருந்ததற்காக  அவர்மீது  அந்த  வழக்கு 2008-இல்  தொடரப்பட்டது.