‘நீர்’ தொடர்பில் பிகேஆர் விடுக்கும் எச்சரிக்கை

rafizi-ramli1கூட்டரசு  அரசாங்கம்  நீர்  சேவை  தொழில்  சட்டத்தின்  114-ஆம் பகுதி  வழங்கும்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி  சிலாங்கூரில்  நீர்  கட்டணத்தை உயர்த்தவும்  நீர்  சேவை வழங்க  சலுகை  பெற்றுள்ள  நிறுவனங்களுக்கு  நியாயமற்ற  இழப்பீடுகளைக்  கொடுக்கவும் முற்படக்  கூடாது  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  எச்சரித்துள்ளார்.

அச்சட்டத்தைப்  பயன்படுத்த  அரசாங்கம்  நோக்கம்  கொண்டுள்ளது  என்று  கூறிய  ரபிஸி,  அது  சிலாங்கூர்  மாநிலத்தில்  நீர்  சேவை  வழங்கிவரும்  எல்லா நிறுவனங்களையும்  எடுத்துக்கொள்ளும்  அதிகாரத்தை  மத்திய  அரசுக்குக்  கொடுக்கும்  என்றார்.

“அந்த  அதிகாரத்தை  ஓர்  அரசியல்  ஆயுதமாக  அவர்கள்  சிலாங்கூர்  மாநில  அரசுக்கு  எதிராகப்  பயன்படுத்தலாம், தண்ணீர்  கட்டணங்களையும்  கூட்டலாம்”, என்று  ரபிஸி பிகேஆர்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

 

TAGS: