ஜாஹிட் பெர்காசா-வின் புரவலர்போல் பேசக்கூடாது

1 ahmad zahidஅஹமட்  ஜாஹிட்  ஹமிடி  உள்துறை  அமைச்சர்  பதவிக்கு  ஏற்ப  நடந்துகொள்ள  வேண்டும்  என  பாஸ்  உதவித்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  கேட்டுக் கொண்டிருக்கிறார். 

“அவர்  உள்துறை  அமைச்சர்போல்  பேச  வேண்டும்.  பெர்காசா  அல்லது  தீவிரவாதப்  போக்குக்கொண்ட  இனவாத  என்ஜிஓ-களின்  புரவலர்போன்று  நடந்து  கொள்ளக்கூடாது”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார். 

போலீசுக்குப்  பொறுப்பான  உள்துறை  அமைச்சர்  என்ற  முறையில்  அஹமட்  ஜாஹிட்  குற்றச்செயல்களுக்கு  எதிராக  அனைவருக்கும்  பாதுகாப்பு   அளிப்பது  தம்  கடமை  என்பதை  உணர  வேண்டும்  என்றாரவர்.  

சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்-கை  அறைந்தால்  வெகுமதி  கொடுக்கப்படும்  என்று  அறிவித்திருப்பது  ஒரு  குற்றமாகாது  என்று  அஹமட்  ஜாஹிட்  கருத்துரைத்ததற்கு  எதிர்வினையாக  மாபுஸ்  இவ்வாறு  உரைத்தார்.