வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்கு பினாங்கு தடை விதிக்கும் என்பது பொய்

banபினாங்கு  பள்ளிவாசல்களில்  வெள்ளிக்கிழமை  தொழுகை  உரைக்குத்  தடை  விதிக்கப்படும்  என  டிவிட்டரில் கூறப்பட்டிருப்பதற்கு  எதிராக  புக்கிட்  பெண்டாரா  டிஏபி  சோசலிச  இளைஞர் தலைவர்,  ஹரிஸ்  ஞுவான்  ஜஹாருடின்  ஜாலான்  பட்டாணியில்  உள்ள  வடகிழக்கு  போலீஸ்  நிலையத்தில்  புகார்  செய்தார்.

அந்த  டிவிட்டர்  பக்கத்துக்குச்  சொந்தக்காரர்  கோலா  நூருஸ்  திரெங்கானு  அம்னோ  இளைஞர்  செயலாளர்  அப்துல்  அசீஸ்  ஜஒஹாரி  என்று  கூறப்படுகிறது.

புகார்  செய்தபின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  ஹரிஸ்,  “இன  உணர்வுகளைத்  தூண்டுவதும்  சமயங்களிடையே  வெறுப்பை  வளர்ப்பதும்தான்” அந்த  டிவிட்டர்  செய்தியின்  நோக்கம்  என்றார்.