கிறிஸ்துவர்கள் தாக்கப்படுவதை பாஸ் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது

pasபாஸ்  தலைவர்கள் தொடர்ந்து  கிறிஸ்துவர்களுக்கு  அணுக்கமாகவே  இருந்துவருவர்  என  அக்கட்சியின்  அமைதித்  தூதர்  முஜாஹிட்  யூசுப்  ராவா  கூறினார்.

சில  தரப்பினர்  சமுதாயத்தில்  குழப்பத்தையும்,  வேற்றுமையையும் உண்டுபண்ணி  வருவதை  வெறுமனே  பார்த்துக்  கொண்டிருக்க  முடியாது  என்றாரவர். முஹாஹிட்,  நேற்று  சுங்கை பட்டாணியில்  கிங்  கத்தோலிக்க  தேவாயலத்தில்  நடைபெற்ற முஸ்லிம்-அல்லாதாருடனான  ஒரு  கலந்துரையாடலில் கலந்துகொண்டு  பேசினார்.

“அறிவற்றவர்கள்  நாட்டை  அழிப்பதைப்  பார்த்துக்கொண்டு  பாஸில்  உள்ள  எங்களால்  சும்மா  இருக்க  முடியாது”,  என்றாரவர்.