சஞ்சீவன்: கார் என்னை மோதித்தள்ளப் பார்த்தது

sri sanதுப்பாக்கிச்  சூட்டிலிருந்து  தப்பிப் பிழைத்த  குற்ற-எதிர்ப்பாளர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனை நேற்று  நெகிரி  செம்பிலானில்  ஒரு  கார்  மோதித்தள்ள  முயன்றது.

பாஹாவில், சட்டவிரோத  செயல்களுக்குப்  பேர்பெற்ற  ஒரு  இடத்துக்கு  மாணவர்கள்  சென்றுவருவதாகக்  கேள்விப்பட்டு  அங்கு  சென்றார்  சஞ்சீவன்.

“மாலை  4மணிக்கு  அந்த  இடத்துக்குச்  சென்றேன்.  அங்கு   ஒரு  புரோடூவா  கஞ்சில்  கார்  என்னையே  கவனித்துக்  கொண்டிருப்பதைப்  பார்த்தேன்.

“பிறகு  அந்தக்  கார்  எங்களைப்  பின்தொடர்ந்தது.  அதன்  ஓட்டுனர்   நடுவிரலை  என்னை நோக்கி  நீட்டி எச்சரிப்பதுபோல்  அசைத்தார்”,  என்றாரவர்.

அதன்பின்  அவர்கள் அங்கிருந்து வேகமாக  புறப்பட்டனர்.  ஆனால்,  அந்தக்  கார்  விடவில்லை.  20  நிமிடங்களுக்கு  விடாமல்  அவர்களைத்  தொடர்ந்து  வந்தது.

ஒரு  வளைவில் சஞ்சீவன்  இறங்கிக்  கொண்டார்.  அவருடைய  கார்  மட்டும்  தொடர்ந்து  சென்றது.  அவர்  இறங்கியதை  அறியாத  கஞ்சில்  கார்,  விடாமல்  பின் தொடர்ந்து  சென்றது.

“ஒரு  கட்டத்தில் கஞ்சில்  என்  கார்மீது  மோத  முயன்றதாக  என்  கார்  ஓட்டுனர்  தெரிவித்தார்”, என  சஞ்சீவன்  கூறினார்.

மைவாட்ச்  அமைப்பின்  தலைவரான  சஞ்சீவன்,  இச்சமபவத்தை  போலீசில்  புகார்  செய்வதற்காக  பாஹாவ்   போலீஸ்  நிலயத்தையும்  மாவட்ட  போலீஸ்  தலைவரையும்  தொடர்புகொள்ள  முயன்றார். ஆனால்,  பதில்  இல்லை.

இப்போது  போலீசில்  புகார்  செய்வதா  வேண்டாமா  என்று  யோசித்துக்  கொண்டிருக்கிறார்.