அன்வார் நீர் ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார், எம்பி-யுடன் தகராறு இல்லை என்றார்

1 anwarபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சிலாங்கூரும்  கூட்டரசு  அரசாங்கமும்  செய்துகொண்ட  நீர்  ஒப்பந்தத்துக்கு  முழு  ஆதரவு  தெரிவித்துக்கொண்டார்.

புரிந்துணர்வுக்  குறிப்பு (எம்ஓயு)  கையொப்பமிடுவதற்குமுன்  அதன்  உள்ளடக்கம்  பற்றித்   தெரிவிக்காமல்  அவர்  அலட்சியப்படுத்தப்பட்டதாகக்  கூறப்படுவதை  அன்வார்  மறுத்தார்.

“அதை  முழுமையாக  ஆதரிக்கிறேன். அதை  உருவாக்குவதில் நானும்  சம்பந்தப்பட்டிருந்தேன். எம்ஓயு  பற்றிக்  கேட்டதற்குத்தான்  அதை  இன்னும்  பார்க்கவில்லை  என்றேன்.

“நான்  அம்னோ  அல்ல……..அதுதான்  எல்லாவற்றையும்  முன்கூட்டியே  தெரிந்துகொள்ள  விரும்பும்”,  என்றாரவர்.