பெர்காசாவுக்கு ‘ஒரு சிறு உதவித்தொகை’ கொடுக்கப்பட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டது

1-simபெர்காசாவுக்கு  நிதிஉதவி  செய்ததை ஒப்புக்கொண்ட  கூட்டரசு  அரசாங்கம், அந்த  வலச்சாரி  என்ஜிஓ-வுக்கு  ஆண்டுதோறும்  நிதி  ஒதுக்கீடு  செய்யப்படுவதில்லை  என்பதையும்  தெளிவுபடுத்தியது.

பிகேஆரின்  பாயான் பாரு  எம்பி  சிம் ட்சே  ட்சின்னுக்கு  வழங்கிய  எழுத்து  வடிவிலான  பதிலில்  இதனைத்  தெரிவித்த  பிரதமர்துறை  அமைச்சர் ஷஹிடான்  காசிம்,  ஒற்றுமை  மீதான  கருத்தரங்கம்  நடத்த “ஒரு  சிறு  தொகை”  கொடுக்கப்பட்டது  என்றார்.

இந்தப்  பதில்  “அதிர்ச்சியளிப்பதாக” சிம்   குறிப்பிட்டார்..

“பிரதமர்  1மலேசியா  சுலோகங்களை  முழங்கிக்  கொண்டே தேசிய  ஒற்றுமை  பற்றிப்  பேசுகிறார். திரைக்குப்  பின்னே,  அரசாங்கம்  பைபிளை  எரிப்பதாக  மருட்டும்  ஒரு  என்ஜிஓ-வுக்கு  நிதியுதவி  செய்கிறது”,  என்றாரவர்.