சிறுவன் கடத்தல் தொடர்பில் போலீசுக்கு மேலும் கண்டனங்கள்

igpபிள்ளையைப்  பராமரிக்கும்  உரிமையை  சிரம்பான்   உயர்  நீதிமன்றம்  அவனின்  தாயார்  எஸ்.தீபாவுக்குக்  கொடுத்திருந்தும்  அவனைக்  கடத்திச்  சென்ற அவனின்  தந்தை  இஸ்வான்  அப்துல்லாவுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க  மறுக்கும்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு பக்காரின்  செயலை  மஇகா  மகளிர்  பகுதி  கண்டித்துள்ளது.

அதன்  தலைவர்  மோகனா  முனியாண்டி, இஸ்வானின்  நடத்தையை  ஒரு  குற்றச்செயல்  என்று  வருணித்தார்.

“தீபாவும்  தாக்கப்பட்டுள்ளார். சட்டப்படி  இஸ்வானுக்கு  எதிராகக்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும். அதனைச்  செய்யுமாறு  மஇகா  மகளிர்  பகுதி  ஐஜிபி-யை  வலியுறுத்துகிறது”,  என்று  மோகனா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.