அவசரப்பட்டு அறிக்கை விடாதீர்: மசீசவுக்கு கைரி அறிவுறுத்தல்

khairஹுடுட்  சர்ச்சையால்  பக்காத்தான்  ரக்யாட்  பிளவுபடும்  என்று  ஆருடம்  கூறப்படும்  வேளையில்  பிஎன்னிலும்  சிறுசிறு  விரிசல்கள்  தோன்றியுள்ளன.

எதுவும்  நிகழ்ந்து  விடாமல்  தடுக்கும்  முயற்சியாக,  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்,  ஹுடுட் மீது  மசீச  அவசரப்பட்டு  எந்த  முடிவுக்கும்  வந்துவிடக் கூடாது  என  வலியுறுத்தியுள்ளார்.

ஹுடுட்  விவகாரத்தில்  அம்னோ  பாஸை  ஆதரிப்பதால் பிஎன்னில்  இருப்பதா,  இல்லையா  என்பதை  மசீச  பரிசீலிக்க  வேண்டும்  என்று  அக்கட்சியின்  துணைத்  தலைவர்  வீ  கா சியோங்  கேட்டுக்கொண்டிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  கைரி  இவ்வாறு  கூறினார்.

ஹுடுட்  விவகாரத்தில்  அரசாங்கம்  இன்னும்  எந்தவொரு  முடிவும்  செய்யவில்லை  என்பதால்  யாரும்  ஊகத்தின் அடிப்படையில்  அறிக்கை  விடுதல் கூடாது  என்றாரவர்.