இன்னொரு மே 13-ஐ ஏற்படுத்தி விடாதீர்- சுல் எச்சரிக்கை

zulkiமுன்னாள்  பெர்காசா  தலைவர்  சுல்கிப்ளி  நூர்டின்,   முஸ்லிம்களின்  பொறுமையைச்  சோதிக்க  வேண்டாம்  எனக்  கிறிஸ்துவ  தீவிரவாதிகளுக்குக்  கடும்  எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

“மே 13  2.0?”  என்ற  தலைப்பில்  வலைப்பதிவிட்டிருக்கும்  அவர்,  முஸ்லிம்களுக்கு  பொறுமையும்  சகிப்புத்தன்மையும்   கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது  என்றும்  ஆனால்,  நாகரிகமானவர்களிடம், பரஸ்பரம்  மரியாதை  பாராட்டுவோரிடம்  மட்டுமே  அவர்கள்  அவற்றைக்  கடைப்பிடிப்பார்கள்  என்றும்  கூறினார்.

கிறிஸ்துவ தீவிரவாதிகள்  நிந்தனை  செய்வதையும்  சினமூட்டும்  கருத்துக்களையும்  நிறுத்திக்கொள்ள  வேண்டும். தவறினால்  அது  “மீண்டும்  ஒரு  மே 13-ஐ நீங்களே  வரவழைத்துக்கொள்வதாக” ஆகிவிடும்  என்றவர்  எச்சரித்தார்.

கத்தோலிக்க  வார  ஏடான த  ஹெரால்ட்  வழக்கில்  கூட்டரசு  நீதிமன்றம்  அளித்த தீர்ப்பைக்  குறைகூறுவோருக்கு  எதிராக சுல்கிப்ளி  இந்த  எச்சரிக்கையை  விடுத்தார்.