அல்லா விவகாரம்: நீதிமன்ற விசாரணைக்கான எஸ்ஐபியின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

allah row reviewஅல்லா என்ற சொல்லை பக்தர்கள் அனைத்து தேவாலாய கூட்டங்களிலும் பயன்படுத்துவது மீது ஒரு நீதிமன்ற விசாரணை கோரும் சீடாங் இன்ஜில் போர்னியோவின் (எஸ்ஐபி) மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

அல்லா என்ற சொல் அடங்கிய கிறிஸ்துவ சமய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியையும் எஸ்ஐபி கோருகிறது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ரோஹானா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை அனுமதிக்கும் முடிவை ஏகமனதாக எடுத்தது.

முன்னதாக, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் எஸ்ஐபி இதே கோரிக்கைக்கு அனுமதி கோரி செய்திருந்த மனுவை நிராகரித்தது. அந்நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

“கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முடிவு தள்ளுபடி செய்யப்படுகிறது”, என்று ரோஹானா கூறினார்.