அன்வார் வழக்கு: ஸ்ரீராம் கோபால் நடத்துகிறார்

 

Sri Ramஅன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீடு விசாரணை இன்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீராம் கோபால் தலைமை ஏற்றுள்ளார்.

தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும் சங்கீதா ஆகியோர் சமர்ப்பிப்பர் என்று தற்காப்பு வழக்குரைஞர் லத்தீபா கோயா கூறினார்.

தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமையில் விசாரணை இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

பெடரல் நீதிமன்ற ஐவர் அமர்விடம் ஸ்ரீராம் கோபால் தமது தரப்பினரை அறிமுகம் செய்து வைக்கிறார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டான் கீ கவோங், டிஎபி தலைவரும் செராஸ் எம்பியுமான டான் கோக் வாய் ஆகியோர் அங்கு காணப்பட்டனர்.

அன்வார் தற்காப்பு குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த சுலைமான் அப்துல்லா உடல்நலக்குறைவால் தமது பணியைத் தொடரமுடியவில்லை.

நம்பிக்கை இருக்கிறதா என்று வினவியதற்கு, “முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி எங்களுடன் இருக்கிறார் (தலைமை தற்காப்பு வழக்குரைஞராக). நான் மனநிலையில் தயாராக இருக்கிறேன். ஆனால், பெரும் நம்பிக்கை இல்லை”,என்று அன்வார் கூறினார்.

அரசு தரப்பில்தலைமை வழக்குரைஞர் சாபி அப்துல்லா வழக்கை நடத்துகிறார்.