எம்பி: போலீஸ் காஜாங்கில் தேவாலய வழிபாட்டைத் தடுக்கப் பார்த்தது உண்மையே

ongகாஜாங், பெதானி  தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை  வழிபாடு  நடந்துகொண்டிருந்தபோது  இரண்டு  போலீஸ்காரர்கள்  அதைத்  தடுக்க  முயன்றது  உண்மைதான். ஆனால்,   கிறிஸ்துவர்களின் தேசிய  எவெங்கலிகல்  கூட்டமைப்புடன்(என்இசிஎப்)  பேசுமாறு  கூறப்பட்டதும் அவர்கள்  திரும்பிச்  சென்று  விட்டதாக. டிஏபி-இன்  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்  கூறினார்.

நேற்று, மலேசியாகினியில்  வழிபாட்டை  அவர்கள்  தடுத்து  நிறுத்தியதாக என்இசிஎப்  தெரிவித்தது  என்ற  செய்தி  வெளியாகி  இருந்தது.