பாரிஸ் தாக்குதல் மலேசியாவிலும் நடக்கலாம்: எச்சரிக்கிறார் ஹிஷாம்

attackபாரிசில்  நடந்ததுபோன்றதொரு  பயங்கரவாதத்  தாக்குதல்  மலேசியாவிலும்  நடக்கலாம்  என்று  எச்சரிக்கிறார் தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்   உஅசேன். அத்தாக்குதலில் 12பேர் கொல்லப்பட்டனர்.

“கடந்த  மாதம் பாரிஸ், லண்டன்  சென்று  திரும்பினேன். அங்கு  உளவுத்  துறைகளுடன் பேசினேன். அங்கு  நடந்த  சம்பவம்  எதிர்பாராமல்  நடந்த  ஒன்று  அல்ல.

“அதை  மிதமாக  நினைத்து விடக்கூடாது. அந்த  நாட்டில் (பிரான்சில்) நிகழ்ந்தது  இங்கு  நிகழாது என்பதல்ல”, என்றவர்  குறிப்பிட்டார்.

எனவே, மலேசியா  அதன்  பாதுகாப்பைக்  குறிப்பாக  சாபா  கடலோரங்களில்  வலுப்படுத்த  வேண்டும்  என்றார்.