சிறைச்சாலைக்குமுன் திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்

vigilஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைக்கு  அனுப்பப்பட்டாலும்  அவரின்  ஆதரவாளர்கள்  அவரைக்  கைவிடவில்லை. நேற்றிரவு  அவரின்  ஆதரவாளர்கள் தங்களின்  ஆதரவைத்  தெரிவிக்க  சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்குமுன் ஒன்று  திரண்டனர்.

பதாதைகளையும்  மெழுகுதிரிகளையும்  கையில்  ஏந்தியிருந்த  அவர்கள், உரத்த  குரலில் “ரீபோர்மாசி”, “பேபாஸ்  அன்வார்(அன்வாரை விடுவிப்பீர்)” என உற்சாகமாக  முழக்கமிட்டனர்.

“இன்னும்   உரக்க, உங்கள்  குரல்  அன்வாருக்குக்  கேட்கட்டும்”  என்று  பிகேஆர்   இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  மாட்  அவர்களை  முடுக்கி  விட்டார்.

இரவு  ஒன்பது  மணி  அளவில்  அங்கு  திரண்டுவந்த  அன்வார்  ஆதரவாளர்கள்  இரண்டு  மணி  நேரம்  அங்கு  கூடிநின்று  பின்னர்  கலைந்து  சென்றனர்.