சிருலின் தாயார் இன்றிரவு ஆஸ்திரேலியா புறப்படுகிறார்

 

sirul'smumஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்தான்துயா கொலையாளிகளில் ஒருவரான சிருல் அஸார் ஒமாரை சந்திக்க அவரின் தாயார் பியா அஹமட் இன்றிரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார்.

74 வயதான அவருடன் அவரது பிள்ளைகளில் ஒருவர், பாஸ் போகோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மற்றும் ஒரு வழக்குரைஞர் ஆகியோர் இன்றிரவு மணி 11.00 க்கு கேஎல்எயிலிருந்து பயணமாகின்றனர்.

இரவு மணி 9.00 க்கு விமானநிலையத்தில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடைபெறும்.

அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிருல் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் ஆஸ்திரேலியா குடிநுழைவுத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.