பங்: அம்னோவின் அழிவுக்காக பிரார்த்தனை செய்தீர்கள், அதனால்தான் ஸ்டேடியத்தில் வெள்ளம் வந்தது

bungகோத்தா  பாருவில்  உள்ள  சுல்தான்  முகம்மட் IV விளையாட்டரங்கில்  பாஸ்  சிறிது  காலத்துக்குமுன்  அம்னோவின்  “அழிவுக்காக”  பிரார்த்தனை  செய்ததாம்.  அதனால்தான் “இத்தனை  ஆண்டுகளில்  இல்லாத  வகையில்  முதல்  முறையாக  அங்கு  வெள்ளப்  பெருக்கு”  ஏற்பட்டதாம்.  சர்ச்சைக்குப்  பேர்போன  பிஎன்  எம்பி  பங்  மொக்தார்  ரடின் இப்படி  ஒரு  காரணத்தை  கூறியுள்ளார்.

“அந்த  விளையாட்டரங்கில்தான்  அம்னோவின்  அழிவுக்காக  பிரார்த்தனை  நடத்தினீர்கள். நூறாண்டுக் காலமாக  விளையாட்டரங்கில்  வெள்ளம்  ஏற்பட்டதே  இல்லை.

“முஸ்லிம்களின்  அழிவுக்காக  பிரார்த்தனை  செய்தீர்கள். அதுதான்  விளயாட்டரங்கில்  வெள்ளம்  பெருகியது”. இன்று  நாடாளுமன்றத்தில்  பேரரசரின்  உரைமீதான  விவாதத்தில்  கலந்துகொண்டபோது  கினாபாத்தாங்கான்  எம்பி  இவ்வாறு  கூறினார்.