நுருல் இஸ்ஸாவுக்கு எதிராக சுல் நூர்டின் போலீசில் புகார்

zulகூலிம்  பண்டார்  பாரு முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர்  சுல்கிப்ளி  நூர்டின்,   வெள்ளிக்கிழமை  பிகேஆர்  உதவித்  தலைவர் நுருல்  இஸ்ஸா  அன்வார்  நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  போலீசில்  புகார்  செய்தார்.

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  முறையீட்டுக்கு  எதிராக  கூட்டரசு  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பு  குறித்து  நுருல்  இஸ்ஸா  கேள்வி  எழுப்பியது ‘நீதிமன்றத்தை  அவமதிப்பதாகும்’  என்று  சுல்கிப்ளி கூறினார்.

நுருல்  இஸ்ஸாவின்  உரை, நீதிமன்றத்  தீர்ப்பைக்  குறைகூறுவதுடன்,  நீதித்துறையையே  அவமதிக்கிறது, தேச  நிந்தனை  நோக்கத்தையும்  கொண்டிருக்கிறது  என்றாரவர்.

-பெர்னாமா