ஜாஹிட்: மலேசியாவில் புவாமீது குற்றப்பதிவு ஏதுமில்லை

phuaசூதாட்ட  மன்னன் பால்  புவா  வெய்  செங், 2004-இல்  மீரியில்  கைது  செய்யப்பட்டதாகக்  கூறப்பட்டாலும்  போலீஸ் பதிவேடுகளி  அவர்மீது  குற்றம்  எதுவும்  பதிவு  செய்யப்படவில்லை.

“போலீஸ்  பதிவேடுகளில் புவா இதற்குமுன் குற்றம்  செய்தார்  என்று  பதிவு  செய்யப்படவில்லை”. கோபிந்த்  சிங்  தியோவின்  கேள்விக்கு  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  எழுத்துப்பூர்வமாக  வழங்கிய  ஒரு- வரி  பதில்  இது.

புவா இதற்குமுன்  குற்றம்  புரிந்திருக்கிறாரா அதற்கான  ஆதாரங்கள்  போலீசிடம்  உண்டா  என  கோபிந்த்  கேட்டிருந்தார். அவருக்குக்  கொடுக்கப்பட்ட  தண்டனை  பற்றியும்  அறிந்துகொள்ள  அவர்  விழைந்தார்.