‘நஜிப்பைக் கவிழ்க்க மகாதிர்- அன்வார் உடன்படிக்கை எதுவும் இல்லை’

ASIAN LEADERSபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைக்  கவிழ்க்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்குமிடையில்  இரகசிய  உடன்படிக்கை  இருப்பதாகக்  கூறுவதை  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  மறுக்கிறார்.

அப்படி  ஒன்று  இருப்பதாக  எதிரணியினர்  சமூக  வலைத்தளங்களில்  செய்தி  பரப்பி  வருகிறார்கள்  என்றாரவர்.

நஜிப்புக்கும்  மகாதிருக்குமிடையிலான  உறவுகளை  மேலும்  மோசமடையச்  செய்வதற்காக  அப்படி  ஒரு  வதந்தி  பரப்பப்படுவதாக  அவர்  சொன்னார்.

“இது  அம்னோவின்  ஒற்றுமையைக்  கெடுக்கும்  முயற்சியாகவும்  இருக்கலாம்  என்ற  சாத்தியத்தையும்  மறுப்பதற்கில்லை”, என  சைட்  அலி  அவரது  வலைப்பதிவில்  கூறினார்.