பாரிசானுக்கு 3,000 இந்தியர் வாக்குகள், மஇகா வாக்குறுதி

 

micpledgeஎதிர்வரும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் குறைந்தபட்சம் 3,000 இந்தியர் வாக்குகள் பாரிசான் வேட்பாளருக்கு அளிக்கப்படும் என்று மஇகா வாக்குறுதி அளித்தது.

அத்தொகுதியில் 4,830 இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் பெரும்பான்மை வாக்காளர்கள் செபெராங் ஜெயாவில் இருக்கின்றனர். ஐந்து வாக்களிப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 500 வாக்காளர்கள் இருக்கின்றனர் என்று மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார்.

அங்குள்ள மஇகா தொகுதியைச் சேர்ந்த 23 கிளைகளிலிருந்து சுமார் 500 பேர் தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

மே 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுகைமி ஷபுடின் (பாரிசான்), டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் (பிகேஆர்), அஸ்மான் ஷா ஓத்மான் (பிஆர்எம்) மற்றும் சாலே இஸாக் (சுயேட்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.