ரோஸ்மா மலர்களுக்காக ரிம3 மில்லியன் செலவிட்டாரா?

rosmahடாக்டர்  மகாதிர்  முகம்மட்  தாம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரைத்  தாக்கிப்  பதிவிட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார்.

அவரின்  ஆடம்பர  வாழ்க்கைமுறை  பற்றி  மட்டுமே  கேள்வி  எழுப்பியதாக  முன்னாள்  பிரதமர்  கூறினார்.

“அவர் (மகளின் திருமணத்தின்போது) மலர் அலங்காரத்துக்கு  மட்டும்  ரிம3 மில்லியன்  செலவிட்டதாக  வதந்திகள்  உலவுகின்றன.

“அது  உண்மையாக  இருக்கலாம் பொய்யாக  இருக்கலாம். ஆனால், மக்கள்  பேசுகிறார்கள்.அதுதான்  பிரச்னை”, என்றார்.

இன்று  காஜாங்கில்  ஜெர்மன் -மலேசியக்  கழகத்தில்  இளைஞர்களும்  தேச  நிர்மாணிப்பும்  என்ற  தலைப்பில் உரையாற்றிய  பின்னர்  மகாதிர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.