தோற்றுப்போன பாஸ் தலைவர்கள் அம்னோவின் வீழ்ச்சியைக் காண விரும்புகிறார்கள்

matபாஸ் கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  முற்போக்காளர்களும்  அவர்களின்  ஆதரவாளர்களும் நேற்றிரவு  ஒரு நிகழ்வில்  கலந்துகொண்டபோது  அனைவருமே  அம்னோவை  வீழ்த்த  வேண்டுமென  முழக்கமிட்டனர்.

கோலாலும்பூரில்  நடைபெற்ற  அந்நிகழ்வில்  பேசிய பாஸ்  முன்னாள்  துணைத் தலைவர்  முகம்மட்  சாபுவும்  மற்றவர்களும்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ  வெற்றி பெறுவதை  எவ்வகையிலும்  தடுக்க  வேண்டும்  என்றனர்.

“அடுத்த  பொதுத்  தேர்தலுக்குப் பின்னரும்  அம்னோவும்  பிஎன்னும் ஆட்சி  செய்ய இடமளிக்கக்  கூடாது.

“மசீச  புதைகுழிக்குப்  போய்விட்டது, கெராக்கான்  தடயமேயின்றி  புதையுண்டு  போனது, மஇகா  எங்கிருக்கிறது என்றே  தெரியவில்லை; அம்னோ  மட்டுமே  எஞ்சியுள்ளது.

“நாம்  தவறாக  எதுவும்  செய்து  விடக்கூடாது. அது  அம்னோவுக்குப்  புத்துயிர்  அளித்து  விடும். அம்னோவுக்குப்  புத்துயிர்  அளிக்க விரும்புவோரும்  இருக்கத்தான்  செய்கிறார்கள்”, என  மாட்  சாபு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முகம்மட்  கூறினார்.