பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன முற்போக்காளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நேற்றிரவு ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது அனைவருமே அம்னோவை வீழ்த்த வேண்டுமென முழக்கமிட்டனர்.
கோலாலும்பூரில் நடைபெற்ற அந்நிகழ்வில் பேசிய பாஸ் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபுவும் மற்றவர்களும் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதை எவ்வகையிலும் தடுக்க வேண்டும் என்றனர்.
“அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் அம்னோவும் பிஎன்னும் ஆட்சி செய்ய இடமளிக்கக் கூடாது.
“மசீச புதைகுழிக்குப் போய்விட்டது, கெராக்கான் தடயமேயின்றி புதையுண்டு போனது, மஇகா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை; அம்னோ மட்டுமே எஞ்சியுள்ளது.
“நாம் தவறாக எதுவும் செய்து விடக்கூடாது. அது அம்னோவுக்குப் புத்துயிர் அளித்து விடும். அம்னோவுக்குப் புத்துயிர் அளிக்க விரும்புவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்”, என மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் கூறினார்.
பாஸ் கட்சியிலும் அனேக போராட்டவாதிகள் உள்ளனர். மகாதிமிர் ஆட்சியில், கமுண்டிங் சிறையில் 11-11-1987ல் இவரை [மாட் சாபு] காணச் சென்றிருந்தேன். அன்றுமுதல் இன்றுவரை இவரது போராட்டத்தில் சிறிதளவும் சோர்வில்லை. ஆனால், தேர்தலில் மட்டும் ஜெயிக்கும் வாய்ப்புக்களை பெற முடியவில்லை. கூஜா தூக்கிகளும், அரை வேக்காடுகளும் எளிதில் ஜெய்ப்பதற்கு காரணம், பாதுகாப்பான, எளிதில் வெள்ளக் கூடிய தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டியிடுகின்றனர்.
கால மாற்றத்தின் திருப்புமுனை அரசியல் ஆட்சி மாற்றமாகும்… பாஸ்மா திட்டத்தின்படி புதியதோர் இஸ்லாமிய அரசியல் கட்சியை பக்காத்தானுடன் இணைத்துக்கொள்ளுங்கள். ஒருமித்த கருத்தோடு / கொள்கையோடு அனைத்து இனத்தாரையும் மலேசியா மக்களாக, இனபாகுபாடின்றி அரவணைத்துக்கொள்ளுங்கள். அல்லது, “பக்காத்தான் ராக்யாத் மலேசியா” என்று ஒரே கட்சியின் கீழ் அனைவரும் ஒன்று சேருங்கள். ஒரே கொள்கை! ஒரே நோக்கம் இருப்பினில் நிச்சயமாக புத்ரா ஜயாவை அடையா வாய்ப்புண்டு!!!!
முற்போக்கு தலைவர்கள் அனைவருக்கும் தேவை.தற்போதைய சூழ்நிலையில் புதிய அத்தியாயம் தேவை.மக்கள் எதிர்பாகிரர்ர்கள் .
உங்கள் தலைமையில் மாற்றம் கொண்டுவாருங்கள்.
தோற்றுப்போன பாஸ் கட்சி தலைவர்கள் , keadilan அல்லது dap யில் இணைவது பொருத்தமான காலம் இது !
பாஸ் மத வாத கட்சியிலிருந்து வெளியேறும் முற்ப்போக்கு வாதிகள்
தங்களுக்குள் ஒரூ தலைவரை தேர்வு
செயிவதே சிறப்பு.மற்ற கட்சிகளில்
இணைவது அந்த கட்சிகளின் ஆதிகத்து க்கு இவர்கள் இரையா
கிவிடுவார்கள்.காணாமல் போய்விடு
வார்கள்.தனித்து செயல் பட்டால்
மலாயிக்காரர்களின் ஆதரவு பெருக
வாயிப்பு கிடைக்கும்.