பணத்தைக் காண்பியுங்கள்: 1எம்டிபி-க்கு மகாதிர் கோரிக்கை

mahathirமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1எம்டிபி  அதன்  முதலீடுகளுக்கும்  செலவுகளுக்கும்  ஆவணச்  சான்றுகளைக் காண்பிக்க  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளார்.

ஆவணச்  சான்றுகளின்றி  அறிக்கைகள்  விடுவது  மட்டும்  போதாது  என்றாரவர்.

“1எம்டிபி  செய்த  எல்லா  முதலீடுகளுக்கும், செலவுகளுக்கும்  ஆதாரம்  தேவை.

“ஆனால், மின்  ஆலைகள்  வாங்கியது,  கோலாலும்பூரில் அரசாங்க  நிலத்தின்  கொள்முதல், பினாங்கில்  தனியார்  நிலத்தின்  கொள்முதல்  ஆகியவற்றைத்  தவிர  வேறு  சான்றுகள்  எதுவும் காண்பிக்கப்படவில்லை.

“தலைமை  செயல்  அதிகாரி )அருள் கந்தசாமி)யும்  பிரதமர் (நஜிப் அப்துல்  ரசாக்கும் வெறும்  அறிக்கைகள் மட்டும்  விட்டுக்கொண்டு  கையெழுத்திடப்பட்ட  ஆவணச் சான்றுகளைக்  காண்பிக்காதவரை, 1எம்டிபி  கடனாக  வாங்கிய  பணம்  காணாமல்  போய்விட்டது  என்றுதான் அனுமானிக்க  நேரும்”, என  மகாதிர்  இன்று  அவருடைய  வலைப்பக்கத்தில்  பதிவிட்டிருக்கிறார்.