பக்கத்தான் ரக்யாட் கதை முடிந்தது

lim guபினாங்கு  முதலமைச்சரும்  டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம்  குவான்  எங்.  பக்கத்தான்  ரக்யாட்  கதை  முடிவுக்கு  வந்து  விட்டதாக  அறிவித்துள்ளார்.

“டிஏபி-யுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கோரி  பாஸ்  முக்தாமாரில்   கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தை  டிஏபி  மத்திய  நிர்வாகக்  குழு  ஏற்றுக்கொள்கிறது. இதுவரை இருந்த  பக்கத்தான்  இனி  இருக்காது.

“மூன்று  கட்சிகள்  சேர்ந்து  ஒருமித்த  கருத்துடனும்  பொதுவான  கொள்கைக் கட்டமைப்புடனும்  அமைத்த  பக்கத்தானை  பாஸ்  முக்தாமார்  தீர்மானம்  வெற்றிகரமாகக்  கொன்று  விட்டது.

“எனவே,  இனி  பக்கத்தான்  இருக்காது”, என  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.