ஜோகூரில் இன்று இளவரசர்- ஆதரவு பேரணி

johorஜோகூர்  பட்டத்திளவரசருக்கும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசுக்குமிடையில்  சர்ச்சை  வலுத்துவரும்  வேளையில் இளவசரருக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  பேரணி  ஒன்றுக்கு இன்று  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அப்பேரணி  மாலை  மணி  4-க்கு  புக்கிட்  செரேன்  அரண்மனையில்  நடைபெறும்.

சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டாருக்கும்  சுல்தான்  குடும்பத்துக்கும்  அன்பையும்  ஆதரவையும்  தெரிவிக்கத்  திரண்டு வருமாறு  ஜோகூர்  மக்களைக்  கேட்டுக்கொள்ளும்  செய்திகள்  சமூக  வலைத்தளங்களில்  வலம்  வந்து  கொண்டிருக்கின்றன.