பிகேஆரில் பக்கத்தான் ‘சாவு’ பற்றிப் பேசத் தடை

pkrபிகேஆரின்  அரசியல்  பிரிவு  பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து  வெளியேறும்  டிஏபி  முடிவு  பற்றி இன்றிரவு  விவாதிக்கும்வரை  கட்சியில்  வேறு  யாரும் அது  பற்றிப்  பேசக்கூடாது  என்று  பிகேஆர்   தடை  விதித்துள்ளது.

அம்முடிவின்மீது கட்சித்  தலைமை  நாளைக்குள் தனது  நிலைப்பாட்டை  அறிவிக்கும்  என  அதன்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  தெரிவித்தார்.

“அதுவரை எந்த  அறிக்கையும்  வெளியிடப்படாது”, என  ரபிஸி  மலேசியாகினியிடம்  கூறினார்.