‘செக்ஸி’ பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க பங்கின் வீடு நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுப்பு

bungகினாபாத்தாங்கான்  எம்பி  பங்  மொக்தார்  ரசினின் ‘செக்ஸி’  கருத்துகளால்  ஆத்திரமடைந்த  தரப்பினர்  அம்பாங்கில்  உள்ள  அவரின்  வீட்டுக்குமுன் கூடி  ஆர்ப்பாட்டம்  செய்வதற்கு  விரைந்து  கொண்டிருக்கிறார்கள்.

இன்று  காலை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  கூடி  கண்டனம்  தெரிவித்த  அவர்கள்  அங்கிருந்து  அவரின்  வீட்டை  நோக்கிப்  படையெடுத்தனர்.

“நேராக  பங்  மொக்தாரின்  வீட்டுக்குத்தான்  செல்கிறோம்”, என  ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவரான  சல்மா  இஸ்மாயில்  கூறினார்.

காலையில்  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  ஒரு  மணி  நேரத்துக்கு மேலாக அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.