புதிய நண்பர்களுடன் எழுச்சி பெறுவோம், முன்னிலும் வலிமை பெறுவோம்

anwமூன்று  வெவ்வேறு  கொள்கைகள்  கொண்ட  கட்சிகளை  ஒன்றிணைந்து  பக்கத்தான் ரக்யாட்டை  உருவாக்கியவரான  அன்வார்  இப்ராகிமுக்கு  அக்கூட்டணி  உடைந்து  போனாலும்  அதன்மீதுள்ள  நம்பிக்கை இன்னும்  குறையவில்லை.

ஐந்தாண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு  சிறையில்  இருந்து  வரும்  அன்வார்,  கூட்டணி  அதன்  சாம்பலிலிருந்து  முன்னிலும்  வலிமை  பெற்றதாக  எழுச்சி  பெறும்  என்றார்.

அரசியல் சீரமைப்பு நிகழும்  சாத்தியம்  இருப்பதாகவும்  அவர்  கோடி  காட்டினார்.

“எதிரணி  திருத்தி  அமைக்கப்பட்டு,  புதிய  என்ஜிஓ-களின் புதுப்  பலத்தையும்  சேர்த்துக்கொண்டு  முன்னிலும்  ஒன்றுபட்டதாய்  வலிமை  பெற்றதாய்  விளங்கும்.

“இப்போராட்டத்தை  உயிருள்ளவரை  கைவிட  மாட்டேன்”, என  அன்வார்  அவரின்  வழக்குரைஞர்கள் வழியே  விடுத்த  அறிக்கையில்  கூறினார்.