யாப்:பள்ளியில் சிலுவையை அகற்ற முடியாது

yapகல்வி  துணை  அமைச்சர்  மேரி  யாப்,  சாபா  தொடக்க நிலைப் பள்ளி  ஒன்றில் இருக்கும்  சிலுவையை  அகற்ற  வேண்டும்  என்ற  கோரிக்கைக்கு  முடியாது  என்று  திட்டவட்டமாகக்  கூறி  விட்டார்.

“சிலுவை  அங்கேதான் இருக்கும்”, என்றவர்  சொன்னதாக  சாபாவில்  வெளிவரும்  டெய்லி  எக்ஸ்பிரஸ்  கூறிற்று.

இதில்  சம்பந்தப்பட்ட  பள்ளி  சண்டகானில் லாபோக்கில்  உள்ள  செயிண்ட் மேரி  தொடக்கநிலைப் பள்ளியாகும்.

தாவாவ்  எம்பி-யுமான  யாப், 2013  கல்வி  அமைச்சின்  சுற்றறிக்கை  ஒன்றைச்  சுட்டிக்காட்டி, “அச்சுற்றறிக்கை, பாதிரிமாரால்  நடத்தப்படும்  பள்ளிகளில்  அவற்றின்  தனிப்பண்புகளும்  அடையாளங்களும் தொடர்ந்து  பராமரிக்கப்படுவதற்கு  அனுமதிக்கிறது”, என்றார்..