ஃபோர்பஸ்: நஜிப் தாக்குப் பிடிப்பது சிரமம்

forbes1எம்டிபி- இன்  யுஎஸ்$700 மில்லியன்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருக்கும்  விவகாரத்தால்  மலேசிய   பிரதமர் பலவீனமடைந்து  விடுவார்   அல்லது பிரச்னைகளை  எதிர்நோக்குவார்.

“பணம்  அவரது  பெயரில்  உள்ள  வங்கிக் கணக்குக்குத்தான்  சென்றது  என்பது  நிரூபிக்கப்பட்டால் நஜிப்  நிலைத்திருப்பது  சிரமமே.

“நிரூபிக்கப்படா  விட்டாலும்கூட  அதனால்  அவர்  பாதிக்கப்படுவது உறுதி”, என கிறிஸ்  ரைட்  என்பார்  நேற்றைய ஃபோர்பஸ்  இதழில்  எழுதியிருந்தார். மலேசிய  தலைவருக்கு  இது  கஷ்ட  காலம். போயும்  போயும்  இந்த  நேரத்திலா  இப்படிப்பட்ட  குற்றச்சாட்டுகள்  வர  வேண்டும்  என்றவர்  குறிப்பிட்டார்.

நஜிப்புக்கு இது  மிகப்  பெரிய சவால்  என்று  ரைட்  குறிப்பிட்டார்.