பிஏசி ஜோ லாவை விசாரணைக்கு அழைக்கும்

joபொதுக் கணக்குக் குழு (பிஏசி), வணிகர்  ஜோ லாவை  விசாரணைக்கு  அழைக்கவுள்ளது.  1எம்டிபி-க்கு  முன்பிருந்த  திரெங்கானு  முதலீட்டு  நிறுவன(டிஐஏ)த்தின்  ஆலோசகர்  என்ற  முறையில்  அவர் விசாரணைக்கு  அழைக்கப்படுவார்.

1எம்டிபி-இன்  விளக்கக்த்தைக்  கேட்ட  பின்னர்  பிஏசி  இம்முடிவுக்கு  வந்ததாக  அதன்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார்.

“டிஐஏ-க்குட்  சிறப்பு  ஆலோசகராக  இருந்தவர்  என்ற  அடிப்படையில்  அவரை  அழைக்கிறோம்”, என்றவர்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.