பணிக்குழு அதன் கடமையைச் செவ்வனே செய்வதை அமைச்சர்கள் உறுதிப்படுத்துவர்

kj1எம்டிபிக்கு  எதிரான  குற்றச்சாட்டுகளைப்  புலனாய்வு  செய்யும்  சிறப்புப்  பணிக்குழு அச்சமோ  பாரபட்சமோ  இன்றி  அதன்  பணியைச்  செய்து  முடிப்பதை  அமைச்சரவை  உறுதிப்படுத்தும்  என்கிறார்  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்.

“விசாரணை  பிரதமர்மீது  என்பதால்  அவர்கள்  சமரசம்  செய்துகொள்வார்கள்  என்ற  தோற்றப்பாடு   இருந்தாலும்கூட  பணிக்குழு  யாருக்கு  ஆதரவாகவும்  செயல்பட  மாட்டாது  என்ற  நம்பிக்கை எனக்குண்டு”, என்றாரவர்.

பணிக்குழு உறுப்பினர்கள்  கண்ணியமிக்கவர்கள். அவர்கள்  தங்கள்  மதிப்பைக்  கெடுத்துகொள்ள  மாட்டார்கள்  என  கைரி  குறிப்பிட்டார்.