1எம்டிபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக்குழு அச்சமோ பாரபட்சமோ இன்றி அதன் பணியைச் செய்து முடிப்பதை அமைச்சரவை உறுதிப்படுத்தும் என்கிறார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்.
“விசாரணை பிரதமர்மீது என்பதால் அவர்கள் சமரசம் செய்துகொள்வார்கள் என்ற தோற்றப்பாடு இருந்தாலும்கூட பணிக்குழு யாருக்கு ஆதரவாகவும் செயல்பட மாட்டாது என்ற நம்பிக்கை எனக்குண்டு”, என்றாரவர்.
பணிக்குழு உறுப்பினர்கள் கண்ணியமிக்கவர்கள். அவர்கள் தங்கள் மதிப்பைக் கெடுத்துகொள்ள மாட்டார்கள் என கைரி குறிப்பிட்டார்.
அந்த அமைச்சரவைக்கே சோதனை வந்து விட்டால் யாரிடம் போய் சொல்லுவது மாமா?. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! சோதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி!