1எம்டிபி: இறுதியில் உண்மை வென்றது

clearபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்  போடப்பட்ட  ரிம2.6 பில்லியன் நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  நிறுவனத்திலிருந்து  வந்த பணம்  அல்ல  என்று  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  கண்டுபிடித்துக்  கூறியதை  1எம்டிபி  வரவேற்றது.

“எம்ஏசிசி-இன்  அறிக்கை  1எம்டிபி-இலிருந்து  பணமெதுவும்  பிரதமர்  கணக்குக்கு  மாற்றிவிடப்படவில்லை  என்பதை உறுதிப்படுத்துகிறது.

“பிரதமருக்கு  பணமெதுவும்  கொடுத்ததில்லை  என்றுதான்  நாங்கள்  எப்போதுமே  சொல்லி வந்திருக்கிறோம். உண்மைதான்  வெல்லும்  என்ற  நம்பிக்கை எங்களுக்கு  இருந்தது”, என  1எம்டிபி  இன்று  காலை  ஓர்  அறிக்கையில்  கூறியது.