பெர்சே 4 பேரணியில் பங்கேற்க மகாதிர் …..?

 

mtoattendbersih4கோலாலம்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெர்சே 4 பேரணியின் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஜொகூர், பாசிர் கூடாங்கில் இன்று பின்னேரத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மகாதிர், “நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”, என்றார்.

இன்று முன்னேரத்தில், “மலேசியா இன்று: நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்”, என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்த மகாதிரை பெருத்த ஆரவாரத்துடன் அங்கிருந்த கூட்டத்தினர் வரவேற்றனர்.

பாசிர் கூடாங் அரங்கத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 மக்கள் பங்கேற்றனர்.