அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன்று கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறும் அம்னோ அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்.
புதன்கிழமை நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்கு முன்னதாக இக்கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஜூலை 28-இல், துணைப் பிரதமர் பதவியிலிருந்து முகைதின் அகற்றப்பட்ட பின்னர் அவரும் நஜிப்பும் சந்திக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
முகைதின் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதைக் கட்சி வட்டாரமொன்று மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியது. முகைதின் கடந்த வாரம் ஆஸ்திரேலியா சென்று விட்டு அண்மையில்தான் நாடு திரும்பினார்.
இக்கூட்டத்துக்கு உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. முகைதின் வெளியேற்றப்பட்டது போலவே ஷாபி அப்டாலும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.
ஷாபியும் கூட்டத்துக்குச் செல்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரமொன்று உறுதிப்படுத்தியது.
மண்டையில மணி அடிக்கற மாதிரி இருக்கு அமீநோகாரர்களுக்கு. நாளான்னைக்கு எத்துனை பேர் தம்போய் மருத்துவமனையில் இருக்கப் போகின்றார்களோ தெரியவில்லை. இவருக்கு மனநோய். அதனால் ஆரோக்கியமா இல்லாத தலைவர்கள் எல்லாம் கட்சியில் அயோக்கியத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என்று அறிக்கை விட்டாலும் விடுவார்கள் இந்த அறிவிலிகள்!.
நல்ல வியாபார பேரம் பேசி கை குலுக்கிக் கொள்ளுங்கள்!! நாடு உருப்படும்!!!!