காணாமல்போன டிபிபி 1எம்டிபி விசாரணையில் சம்பந்தப்பட்டவரல்ல

kevinகாணாமல்போன  சட்டத்துறை  அலுவலக  வழக்குரைஞர்  அந்தோனி  கெவின் மொராய்ஸ்,  1எம்டிபி  மீதான  விசாரணையில்  எந்த  வகையிலும்  சம்பந்தப்பட்டவர்  அல்லர்  என்பதைச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  இன்று  தெளிவுபடுத்தினார்.

“திரு  மொராய்ஸ் (இடம்)  காணாமல்போனதை  போலீஸ்  விசாரணை  செய்து  வருவதால்  அது  பற்றி  வதந்திகளைப்  பரப்ப  வேண்டாம்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.

மொராய்ஸ் 2014  ஜூலை 15-இல், மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்திலிருந்து  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்துக்கு  பணியிடமாற்றம்  செய்யப்பட்டதையும் அபாண்டி  ஓர்  அறிக்கையில்  தெளிவுபடுத்தினார்.