பிரதமர்மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்து கருத்துரைக்க பண்டிகார் மறுப்பு

pandikarமக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா,  பிரதமர்  நஜிப்மீதான  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  குறித்து  இப்போதைக்கு  எந்த  முடிவும்  எடுக்க  மாட்டார்.  முதலில் தம்மிடம்  தாக்கல்  செய்யப்பட  வேண்டும்  அதன்  பின்னரே  அதன்மீது  முடிவெடுக்கப்படும்  என்றாரவர்.

ஆசியான்  அனைத்து  நாடாளுமன்றப்  பேரவைக்  கூட்டத்தில்  கலந்துகொண்டிருக்கும்  பண்டிகாரிடம்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டால்  அதை  அவர்  ஏற்பாரா  என  வினவியதற்கு   நாடாளுமன்றக்   கூட்டம்  இப்போது  நடக்கவிலலை  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“நேரம்  வரும்போது  அது  பற்றி  முடிவு  செய்வேன்”, என்றாரவர்.