பெர்சே 4 பேரணி தொடர்பில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
“பெர்சே 4 பேரணி விசாரணைக்கு உதவ இன்று பிற்பகல் மணி 3க்கு டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறும் செய்தி போலீசிடமிருந்து வந்துள்ளது”, என சுவா டிவிட் செய்திருந்தார்.
விசாரணை அதிகாரி சார்ஜன் டென்னிஸ் அவரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டதாக சுவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தம்மீதுள்ள குற்றச்சாட்டு என்னவென்பது சுவாவுக்கே தெரியவில்லை.
“எதன் அடிப்படையில் விசாரணை என்பதை அவர் தெரிவிக்கவில்லை”, என்றாரவர்.
நாட்டில் எவ்வளவோ முக்கிய காவல் வேலைகள் இருக்கின்றன ஆனால் வேலை அற்று போய் எவனோ எதையோ சரைத்தானாம்.
நாட்டில் காரணமில்லாமல் பலர் காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள்.அடிகடி நகை கடையில் கொள்ளை.இதையெல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாத விஷயத்தை துப்பறிந்து கொண்டிருக்கிறார்களே.
நம் போலீசார் பாவம் இந்நிலைக்கு தல்லபட்டுவிட்டனர் .நாட்டில் இவர்களுக்கு வேறு வேலைகள் ஏதும் இல்லை .