பெர்சே 4 பேரணி: தியான் சுவாவுக்கு அழைப்பாணை

tianபெர்சே 4  பேரணி  தொடர்பில்  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவாவும்  விசாரணைக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார்.

“பெர்சே  4 பேரணி  விசாரணைக்கு  உதவ  இன்று  பிற்பகல்  மணி 3க்கு டாங்  வாங்கி   போலீஸ்  நிலையத்துக்கு  வருமாறு  கூறும்  செய்தி  போலீசிடமிருந்து  வந்துள்ளது”, என  சுவா  டிவிட்  செய்திருந்தார்.

விசாரணை  அதிகாரி  சார்ஜன்  டென்னிஸ்   அவரைத்  தொடர்புகொண்டு  விசாரணைக்கு  உதவுமாறு  கேட்டுக்கொண்டதாக  சுவா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

தம்மீதுள்ள  குற்றச்சாட்டு  என்னவென்பது  சுவாவுக்கே  தெரியவில்லை.

“எதன்  அடிப்படையில்  விசாரணை  என்பதை  அவர்  தெரிவிக்கவில்லை”, என்றாரவர்.