ஆறு மாதங்கள் காத்திருந்த பின்னர் பதவி துறந்தார் 1எம்டிபி ஆலோசகர்

1mdbadvisorquitஅரசு நிறுவன விவகாரங்கள் குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு ஆறு மாதங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டும் அது பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 1எம்டிபியின் முன்னாள் ஆலோசகர் பதவியை விட்டு விலகிக் கொண்டார்.

“நான் 1எம்டிபி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஜனவரி 25, 2015 இல் நியமிக்கப்பட்டேன்”, என்று அப்துல் சாமாட் அலியாஸ் இன்று ஓர் அனைத்துலக மாநாட்டில் கூறினார்.

அரசு நிறுவன விவகாரங்கள் குறித்து தமக்கு முழுமையாக தகவல், குறிப்பாக அவற்றின் இலாப நட்டங்கள் பற்றியவை, வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். மீண்டும் மீண்டும் கேட்டேன். எதுவும் கிடைக்கவில்லை”, என்று அப்துல் சாமாட் அம்மாநாட்டில் பேசிய போது கூறினார்.

“ஜூலை 29 இல், நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன்”, என்று மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்களின்  சிரிப்புக்கும் கைத்தட்டலுக்கும் இடையில் அப்துல் சாமாட் கூறினார்.