வழக்குரைஞர்கள்: செப் 16 பேரணியில் வன்செயல்கள் மூளாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும்

ericசெப்டம்பர்  16-இல் மலாய்  என்ஜிஓ-கள் நடத்தும்  பேரணியில்  இனவாத  வன்செயல்கள்  தலையெடுக்காமல்  அதிகாரிகள்  பார்த்துக்கொள்ள  வேண்டும்  என  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

மலாய்  மானம்  காப்பதற்காக  நடத்தப்படும்  பேரணி  என்று  அழைக்கப்படும்  அதில்  வன்செயல்கள்  தலையெடுக்கும்  அபாயம்  இருப்பதாக  அந்த  அமைப்பின்  செயல்முறை இயக்குனர்  எரிக் பால்சன்  கூறினார்.

“எனவே, அதிகாரிகள் விழிப்பாக இருந்து  ஆர்ப்பாட்டம்  நடக்கும்  இடங்கள்  புக்கிட்  பிந்தாங்,  பெட்டாலிங்  ஸ்திரிட் போன்றவை  என்பதால்  ஜூலை  மாதம்  லவ்  யாட்  பிளாசாவில்  நிகழ்ந்ததைப்  போன்ற  இனவாதச் சம்பவம்  எதுவும்  நடப்பதைத்  தடுக்க  தேவையான  நடவடிக்கைகளை  எடுத்துக்கொள்ள  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொள்கிறோம்”, என்றார்.