உத்துசான் வழக்கில் இழப்பீட்டை மதிப்பிடுவதில் உதவ அன்வாருக்கு நீதிமன்றம் அழைப்பு

anwarபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா அவருக்குக்  கொடுக்க  வேண்டிய  இழப்பீட்டை  மதிப்பிட  நாளை  நீதிமன்றத்துக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார்.

அன்வாருக்கு  இழப்பீடு  கொடுக்க  வேண்டும்  என்ற  தீர்ப்பை  நிறுத்தி  வைக்க  உத்துசான்  செய்து  கொண்ட  மனுவைத் தள்ளுபடி  செய்த  உயர்  நீதிமன்ற  நீதிபதி ஹுயு  சியு  கெங், இழப்பீட்டை மதிப்பிடுவதில்  உதவ  அனவார்  நீதிமன்றம்  வர  வேண்டும்  என்று  உத்தரவிட்டார்.

பிரிட்டிஷ்  ஒலிபரப்புக்  கழகத்துக்கு  வழங்கிய  நேர்காணல்  பற்றி   வெளியிட்டிருந்த   செய்தியில்  உத்துசான்  தமக்கு  அவதூறு  விளவித்ததாகக்  கூறி  அன்வார்  தொடுத்திருந்திருந்த  வழக்கில்  உத்துசான்  குற்றம்  புரிந்ததாக  தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது..