பக்கத்தான் ஹராபான் விவகாரத்தால் பிகேஆரில் பிளவில்லை

azபக்கத்தான்  ஹராபான்  அமைக்கப்பட்டதன்  தொடர்பில் பிகேஆர்  மத்திய  செயல்குழு உறுப்பினர்கள்  25பேர்  மகஜர்   தாக்கல்  செய்ததை  அடுத்து  அக்கட்சி  பிளவு பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை  அக்கட்சியின் துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  மறுத்தார்.

புதிய  கூட்டணி  அமைக்கப்பட்டதன்மீது  கேள்வி  எழுப்பும்  அம்மகஜர் பற்றி  இன்னும்  விவாதிக்கப்படவே இல்லை  என்றாரவர்.

மேலும்  அது  கட்சியின்  உள்  விவகாரம். அதை  ஊடகங்களுடன்  விவாதிக்க  முடியாது.

“பிளவு இல்லை (கட்சியில்). இது  ஒரு  உள்விவகாரம். உள்விவகாரங்களை  நாங்கள்  பொதுவில்  விவாதிப்பதில்லை”, என்று  செய்தியாளர்களிடம்  அஸ்மின்  தெரிவித்தார்.