ஒங்: மசீச பிஎன்னில் இருப்பதா வேண்டாமா என்று கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும்

ongமுன்னாள்  மசீச  தலைவர்  ஒங்  தி  கியாட், இத்தனை  நடந்த  பின்னரும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆதரவு  தெரிவித்துக்  கொண்டிருக்கும்  மசீசவின்  நிலை  கண்டு  ஏமாற்றமடைவதாகக்  கூறினார்.

நாட்டு  நடப்பின்மீது  மசீச  அடிநிலை  உறுப்பினர்களும்  சீனர்  சமூகமும்  அதிருப்தி   கொண்டிருப்பதாக  அவ்ர்  சொன்னார்.

“என்னுடைய  கருத்தைக்  கேட்டால் நான்  இப்போதுள்ள  தலைவர்கள்போல்  நடந்து  கொண்டிருக்க  மாட்டேன்.  வேறு  மாதிரியாகத்தான்  நடந்து  கொண்டிருப்பேன்.

“அவசியமென்றால் கட்சியில்  அல்லது  சமூகத்தில்  நாம்  இன்னமும் *(பிஎன்)  கூட்டணியில்  இருக்க  வேண்டுமா  வேண்டாமா  என்று  கருத்துக் கணிப்புக்கூட  நடத்தலாம்”, என  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  ஒங்  கூறினார்.