1எம்டிபி கணக்குகளின் ஆய்வு 3-4 மாதங்களில் முடிவுறும்

arul1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  கணக்குகளை  ஆய்வு  செய்யும் தேசிய  கணக்காய்வுத்  துறை  மூன்று  மாதங்களில்  ஆய்வை  முடித்துக்  கொண்டு  அறிக்கை வெளியிடும்  என  அதன்  துணை  இயக்குனர்  ஆர். ராஜ  சுந்தரக்  கண்ணன்  இன்று  தெரிவித்தார்.

இப்போது  ஆய்வின்  இரண்டாம்  கட்டம்  நடைபெறுவதாக  அவர்  சொன்னார். இதில்  இதுவரை  விசாரிக்கப்படாத  கூறுகள்மீது  விரிவான  ஆய்வுகள்  செய்யப்படும்.

“முதல் கட்ட  ஆய்வுகள்  முடிந்து  விட்டன. இன்னும்  வெளிநாட்டு  விவகாரங்கள்  பற்றிய  தகவல்களை  ஆராய  வேண்டியுள்ளது. இன்னும்  மூன்று,  நான்கு  மாதங்களில்  அறிக்கை  வெளியிட  முடியும்  என்று  நம்புகிறோம்”, என்றாரவர்.