டிஏபி: சிலாங்கூர் ஞாயிற்றுக்கிழமையை டோல்-அற்ற நாளாக ஆக்கிட வேண்டும்

szeநெடுஞ்சாலைகளைப்  பயன்படுத்துவோர்  பிஎன்னால்  ஏற்பட்டுள்ள  விலை  உயர்வுகளை  எதிர்கொள்வதற்கு உதவியாக  சிலாங்கூர்  அரசு  ஞாயிற்றுக்கிழமையை  டோல்-அற்ற  நாளாக ஆக்கிட வேண்டும்  என  மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவர்  பரிந்துரைத்துள்ளார்.

சிலாங்கூர்  அரசு  ஸ்பிரிண்ட்  நெடுஞ்சாலையிலும்  டமன்சாரா- பூச்சோங்  நெடுஞ்சாலையிலும்(எல்டிபி)  இதைச்  செய்ய  முடியும்  என  கின்ராரா  சட்டமன்ற  உறுப்பினர்  இங்  ஸ்ஸே ஹான்  கூறினார்.

அவ்விரு  நெடுஞ்சாலைகளிலும்   சிலாங்கூர்  20 விழுக்காடு  பங்குதாரர். கடந்த  ஆண்டு  அவை ரிம138 மில்லியன்  ஆதாயம் கண்டன. அதில்  சிலாங்கூரின்  பங்கு ரிம27.6 மில்லியன்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார்  13 மில்லியன்  மோட்டாரோட்டிகள்  அவ்விரு  நெடுஞ்சாலைகளையும்  பயன்படுத்துவதாக  மதிப்பிடப்படுகிறது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை  டோல்-அற்ற  நாளாக அறிவிக்கப்பட்டால் ஆண்டுக்கு 13மில்லியன் மோட்டாரோட்டிகள்  பயனடைவார்கள்  என்றாரவர்.