மடத்தனமான காரணங்கள் வேண்டாம், துணிச்சலிருந்தால் மோதிப் பாருங்கள்: அருளுக்கு புவா பதிலடி

pua1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  “மடத்தனமான  காரணங்களை”ச்  சொல்லிக்  கொண்டிருக்கக்  கூடாது  என்கிறார்  டிஏபி  எம்பி  டோனி  புவா.

அருள்  ஓர் “ஆண்மகன்”போல்  நடந்துகொண்டு  நேரடியாக   ஒளிபரப்படும்  1எம்டிபி  மீதான  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்து  கொள்ள  வேண்டும்  என்றவர்  குறிப்பிட்டார்.

ஊடகங்களில் தம்மை  இழிவுபடுத்துவதை வழக்கமாகக்  கொண்டிருக்கும்  அருளுக்கு  நேருக்கு  நேராகக்  கருத்துரைக்கக்  கிடைத்திருக்கும்  அருமையான  வாய்ப்பு  அது என்றாரவர்.

“என்னை  அவமதிக்கக்  கிடைத்துள்ள  வாய்ப்பை  அவர்  விட்டு  விடலாமா”, என்றவர்  வினவினார்.

புவா பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலகினால்தான் சவாலை  ஏற்றுக்கொள்ள  முடியும்  என்று  அருள் கூறியிருப்பதை “மடத்தனமான  காரணம்”  என  புவா  வருணித்தார்