அருள்-புவா விவாதத்தை வெள்ளிக்கிழமை வைத்துக்கொள்ளலாம்- ஆர்டிஎம் பரிந்துரை

fridayஆவலுடன்  எதிர்பார்க்கப்படும்   பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி புவாவுக்கும்  1எம்டிபி  தலைவர்  அருள் கந்தா  கந்தசாமிக்குமிடையிலான  தொலைக்காட்சி  விவாதம்  வரும்  வெள்ளிக்கிழமை  நடைபெறலாம்.

அவ்விவாதத்தை  வெள்ளிக்கிழமை  இரவு  9மணியிலிருந்து  10வரை  வைத்துக்கொள்ளலாம்  என  தேசிய  ஒலி-ஒளிபரப்பு  நிலையமான  ஆர்டிஎம்  பரிந்துரைத்திருப்பதாக  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே சைட்  கெருவாக்  கூறினார்.

நடுவர் ஒருவரும்  நியமிக்கப்படுவார்  என  சாலே  தெரிவித்ததாக  மலாய்  மெயில்  ஆன்லைன்  கூறிற்று.

புவாவைத்  தொடர்பு  கொண்டபோது  இதன்  தொடர்பில்  இன்று பின்னேரம்  செய்தியாளர்  கூட்டம்  ஒன்று  கூட்டப்படும்  என்றார்.